Friday, 10 October 2014

96 தத்துவங்கள்

96 வகை தத்துவங்கள் என்பது அனைவராலும் சொல்லபடுகின்றது அதை சற்று விரிவாக கீழே காண்போம் .

ஞானேந்திரியம் - 5 , பொறி - 5 , புலன்கள் - 5, கர்மேந்திரியம் - 5 , அந்தக்கரணம் - 4 
 ஆக  தத்துவங்கள் - 24 
வித்யா தத்துவம் - 7 
சிவ தத்துவம் - 5 
பிற கருவிகள் - 60 
  
மொத்தமாக 96  தத்துவங்கள் 


சற்று விரிவாக பார்த்தோமானால் :

பூதங்கள் 5  
ஞானேந்திரியம் - 5 ஞானேந்திரியம் - 5 
 கிரியைகள் 5 
கன்மேந்திரியம் 5 
கன்மேந்திரிய கிரியைகள் 5 
அறிவு1 
கரணம் 4 
நாடி 10 
வாய்வு 10 
ஆசயம் 5 
கோசம் 5 
ஆதாரம் 6 
மண்டலம் 3 
மலம் 3 
தோஷம் 3 
ஈஷனை 3 
குணம் 3 
விராகம் 8 
வினை 2 
அவஸ்தை 5 

மொத்தமாக 96 

தனி தனியாக தத்துவ விளக்கம் :

பூதங்கள் 5 விளக்கம் :

1 . ஆகாயம்  : பரவெளி - நிறம் - ஸ்படிகம் , இதன் கூறுகள் : காமம் , குரோதம்                             லோபம் , மோஹம் , மதம் ; மொத்தமாக 5 

2 . வாயு         :  காற்று - நிறம் - புகை , பச்சை , ஸ்படிகம் . இதன் கூறுகள் :                                     இருத்தல்,நடத்தல் ,ஓடல் ,கிடத்தல் ,நிற்றல்  மொத்தமாக 5 


 3 . தேயு         :  நெருப்பு / அக்னி - நிறம் - சிகப்பு , இதன் கூறுகள் : பயம் ,                                           அகங்காரம் , சோம்பல் , நித்திரை , மைதுனம் ; மொத்தமாக 5 

4 . அப்பு          :   ஜலம் - நிறம் - ஸ்படிக வெள்ளை . இதன் கூறுகள் : உதிரம் ,                                  மச்சை , சிறு நீர் , மூளை , சுக்கிலம் ; மொத்தமாக 5 

5 . பிருதிவி  :   மண் - நிறம் - பொன்மை . இதன் கூறுகள் : மயிர் , தோல்                                        நரம்பு , எலும்பு , இறைச்சி ;  மொத்தமாக 5 

      ஞானேந்திரியம் -   5  விளக்கம் :

1 . சுரோத்திரம்  - காது -  சப்தங்களை கேட்கும் 

2 . த்வக்கு            - மேல் தோல் - ஸ்பரிச உணர்வு 

3 . சட்சூ                - கண் - ரூபங்களை பார்க்கும் 


4 . சிங்குவை     - நாக்கு - அறுசுவைகளை அறியும் 

5 . ஆகிரணம்     - நாசி - வாசனைகளை அறியும் 

 
ஞானேந்திரியம்  கிரியைகள் 5 விளக்கம் :

 1 . சப்தம்           -  செவியில் நின்று கேட்பது 

2 .  ஸ்பரிசம்    -   தேகத்தில் , சர்மத்திலிருந்து சுகமென்பதை தெரிவிக்கும் 

3 .  ரூபம்           -  கண்ணில் நின்று பல காட்சிகளை காண்பிக்கும் 

4 .  ரசம்              -  நாவில் நின்று அறுசுவையின் பேதங்களை அறிவிக்கும் 

5 . கந்தம்           -  நாசியில் இருந்து வாசனை பேதங்களை உணர்த்தும் 

கன்மேந்திரியம் 5  விளக்கம் :

1 . வாக்கு - வாய் - பேசுவது

2 . பாணி - கை - ஆட்டி அசைத்து வேலை செய்தல்

3 .  பாதம் - கால் - நடத்தல்

4 . உபஸ்த்தம் - நீர் வரும் குறி - காம சுகம் அனுபவித்தல்

5 .  குதம் - பாயுரு - ஆசனவாய்

கன்மேந்திரிய கிரியைகள் 5  விளக்கம் :

1 . வசனம் - வாயில் இருந்து பேசுவிப்பது

2 . தானம் - கையில் இருந்து கொடுப்பது

3 . கமனம் - காலில் நின்று நடத்துவிக்கும்

4 . ஆனந்தம் - லிங்கம் , யோனியில் நின்று கர்மானந்தம் விளைவிக்கும்

5 . விசர்ஜனம் - அபானத்தில் நின்று மலத்தை வெளியேற்றும்

அறிவு 1 விளக்கம் :

1 . அறிவு -  இது ஆகாயத்தின் அம்சம் , ஆகையால் உச்சியில் இருந்து                                            சகலத்தையும் செயல்விக்கும்.

நாடிகள் 10  விளக்கம் :

1 . இடகலை - வலது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி  ஏறி இடது                    நாசியை பற்றி நிற்கும்

2 . பிங்கலை - இடது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி வலது நாசியை    பற்றி நிற்கும்

3 . சுழுமுனை - குதத்தை பற்றி நின்று ஏறி பிராண வாயுவை சேர்ந்து சிரசளவு முட்டி          நிற்கும்

4 . சிங்குவை - உண்ணாக்கில் நின்று அன்ன சாரம் ஊரவும் பானத்தை விழுங்கவும்            செய்யும்

5 . புருடன் - வலக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்

6 . காந்தாரி - இடக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்

7 . அத்தி - வலக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்

8 . குரு - இடக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்

9 . அலம்புடை - கண்டத்தில் இருந்து நாசியில் கசிந்து நீரை ஏற்ற இறக்க உபாயங்கள் செய்யும்

10 . சங்கினி - உபஸ்தத்தில் இருந்து ஆனந்தத்தில் மிஞ்ச வொட்டாமல் காக்கும்

வாயு 10 விளக்கம் :

1 . பிராணன் - மூலாதாரத்தை சேர்ந்து மேல் நோக்கி இதயத்தில் நின்று நாசியில் சென்று        திரும்பி அலையும்படி செய்யும்

2 . அபானன் - குதத்தை பற்றி நின்று ஜாடராக்கினியாய் உஷ்ணத்தை உண்டாக்கி , உண்ட      அன்ன பானாதிகளை ஜீரணிக்க செய்யும்

3 . வியானன் - சர்வாங்கமும் வியாபித்து இருந்து பொருத்திடங்கள் எல்லாம் களைப்பும்          தவனமும் உண்டாகசெய்யும்

4 . சமானன் - சரீரத்தின் நடுவான நாபிஸ்த்தானத்தில் நின்று ஜீரணித்த அன்ன                       பானாதிகளை உதிரமாக்கி ரத்த நாடிகளின் வழியாக இழுத்து சென்று  சமமாக பரவி தேகத்தை வளர்க்கும்

5 . உதானன் - கண்டஸ்தானத்தில் நின்று சத்ததோடே கலந்து குரலோசை செய்ய ,             பேசக்கூடிய காரியத்தை செய்யும்

6 . நாகன் - வாயில் இருந்து வாந்தி செய்விக்கும்

7 . கூர்மன் - கண் ரப்பையில் இருந்து விளிக்கசெயும்

8 . கிரிதரன் - மூக்கில் நின்று குறுகுறுத்து தும்மல் உண்டாக்கும்

9 . தேவதத்தன் - மார்பில் நின்று கபத்தை சேர்த்து நெட்டி , கொட்டாவி , விக்கல்                        உண்டாக்கும்

10 . தனஞ்செயன் - பிராணன் நீங்கின பிறகும் 3 நாட்கள் மட்டும் இருந்து சரீரம் வீங்கி               வெடித்து போவான் , அக்னியில் சுடும்போது அப்போதே போய்விடும்

ஆசயம் 5  விளக்கம் :

1 . ஆமாசயம் - அன்னம் , தண்ணீர் பருகுமிடம்

2 . ஜலாசயம் - அன்னம் , தண்ணீர் இறங்குமிடம்

3 . மலாசயம் - மலம் சேருமிடம்

4 . ஜலஞ்சயாசம் - மூத்திரம் சேருமிடம்

5 . சுக்கிலாசயம் - விந்து நிறைந்து இருக்குமிடம்

கோசங்கள் 5  விளக்கம் :




1 . அன்னமய கோசம் - ஸ்தூல சரீரத்தை அழிக்காமல் நிலைக்கசெயும் .

2 . பிராணமய கோசம் - பிராண வாயும் கர்மேந்திரியங்களும் சேர்ந்து சொப்பனத்தில்                சூட்சும சரீரத்துடன் சேர்ந்து விவகாரம் செய்யும்

3 . மனோமய கோசம் - மலமும் கண்மேந்திரியமும் சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில்            சேர்ந்து செயல் படும்

4 . விஞ்ஞானமய கோசம் - புத்தியும் பொறிகளும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும                      சரீரத்தில் செயல் படும்

5 . ஆனந்த மய கோசம் - காரண சரீரத்துக்கு ஆதாரமாக இருந்து மேற்கூறிய பிராண ,               மனோமய , விஞ்ஞானமய கோசத்துடன் சூட்சும சரீரம்  நிலைத்து நிற்கும்.

ஆதாரங்கள் 6 சிறு விளக்கம் :

1 . மூலாதாரம் - குதத்துக்கும் , குய்யத்துக்கும் மத்தியில் உள்ள திரிகோண ஸ்தானம் ,            தேவி வல்லபை இதற்க்கு அதிர்ஷ்டான மூர்த்தி - விநாயகர் .


2 . சுவாதிஷ்டானம் - முதுகுத்தண்டின் அடிப்பகுதி சமீபம் , ஆண்குறி அல்லது பெண்குறி        அடிபகுதியில் உள்ள நாற்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி பிரம்ம தேவர் , தேவி சரஸ்வதி


3 . மணிபூரகம் - நாபிச்தானத்திற்கு மேலுள்ள பிறை போல் வளைந்த ஸ்தானம் ,இதற்க்கு      அதிஷ்டான மூர்த்தி மகா விஷ்ணு , தேவி மகாலட்சுமி


4 . அனாஹதம் - ஹிருதய ஸ்தானத்தில் உள்ள முக்கோண ஸ்தானம் , இதற்க்கு    அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி 

5 . விசுத்தி - கண்டத்தில் உள்ளது , அருகோனஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி          மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி 

6.ஆக்ஞா - முகத்தில் உள்ள புருவ மத்தி - திரிகோண உச்சஸ்தானம், இதற்க்கு                        அதிஷ்டான மூர்த்தி சதாசிவன் , தேவி மனோன்மணி 


அக்னி மண்டலம் 3  விளக்கம் :

1 . அக்னி மண்டலம் -  மூலாதாரத்தில் இருந்து இளகி நாபி வரையில் முயற்சி செய்யும் 

2 . ஆதித்த மண்டலம் - நாபியில் இருந்து கண்டம் வரை ஸ்திரம் செய்யும் 

3 . சந்திர மண்டலம் - கண்ட ஸ்தானத்தில்  இருந்து புருவ மத்தி வரை ஸ்திரமாகும்

மலங்கள் 3 விளக்கம் :

1 . ஆணவ மலம் - ஸ்தூல சரீரத்தை நான்தான் என்று நினைத்து இருக்கும்

2 . காமிய மலம் - கண்ணால் கண்டவைகளை எல்லாம் இச்சிக்கும்

3 . மாயா மலம் - தனக்கு நேரும் நிலையை தானறியாமலே செய்தல் , கோபம் கொள்ளல்

முப்பிணிகள் :

1 . வாதம் - வாயு

2 . பித்தம் - அக்னி

3 . சிலேத்துமம் - அப்பு


ஈஷணை 3 விளக்கம் :

1 . தாரேஷனை - பெண்ணாசை ( ஆணாசை ) அதிகம் கொள்ளல்

2 . புத்திரேஷனை - புத்திர , புத்திரி மீது அதிக ஆசை

3 . அர்தேஷனை - பொருள்கள் மீது அதிக ஆசை வைத்தல்

குணங்கள் 3  விளக்கம் :

1 . சாத்வீகம் - நிறம் வெண்மை , சகலரும் மதிப்பர் , அமிர்த குணம் , இதில் லயித்து இருப்பவர் தத்துவ ஞான நிஷ்டை அடைவர்

2 . ராஜஸ குணம் - நிறம் சிவப்பு , இக்குணம் படைத்தவர் அகங்காரம் ஆணவம் உடன் இருப்பார்

3 . தாமச குணம் - நிறம் கருப்பு , இவர்கள் அதிக உணவு சோம்பல் , நித்திரை , மிகுந்த கோபம் எதிலும் நிலை இன்மை உடையவர் .

விரகங்கள் 8  விளக்கம் :

1 . காமம் - அதிக ஆசை கொள்ளல்

2 . குரோதம் - பகை கொள்ளல் , அன்பில்லாமை

3 . லோபம் - பிறர்க்கு ஈயாதவர் , கருமி

4 . மோகம் - பலவற்றிலும் ஆசைப்படுதல்

5 . மதம் - பிறரை மதியாதிருத்தல்

6 . மாச்சரியம் - மனதில் சதா விரோத எண்ணங்கள்

7 . இடும்பை - எல்லோரையும் உதாசீனபடுத்துதல்

8 . அஸ்சூயை - பொறாமைக்குணம்

அவஸ்த்தைகள் 5 ஸ்தானங்கள் :

1 . சாக்கிரம் - லலாடஸ்தானம் - ஆக்ன்யா சக்கரம்

2 . சொப்பனம் - கண்டஸ்தானம் - விசுத்தி சக்கரம்

3 . சுழுப்தி - ஹிருதயஸ்தானம் - அனாஹதம் சக்கரம்

4 . துரியம் - நாபிஸ்தானம் - மணிபூரகம் சக்கரம்

5 . துரியாதீதம் - குய்யஸ்தானம் - ஸ்வாதிஷ்டானம் , மூலாதாரம் சக்கரம்

மொத்தமாக 96 தத்துவங்கள் , 

ஞாபகத்தில் வைத்து கொள்வது கடினம் என்பவர்கள் ....  தொலைகாட்சியில் நரியாட புலியாட நிகழ்ச்சியை பார்க்க செல்லலாம் ,,,,

No comments:

Post a Comment